யாழில் வாள் வெட்டு சம்பவம்- மூன்று இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் வாள்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொக்குவில் பகுதியில் கடந்த 03ஆம் திகதி இளைஞன் ஒருவர் மீது மேற்கொண்ட வாள் வெட்டு தாக்குதலின் போது இளைஞனின் கைவிரல் துண்டாட்டப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்து வந்திருந்த நிலையில் மூன்று இளைஞர்கள் நேற்று (11) கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள், மூன்று கஜேந்திரா வாள்கள் உள்ளிட்ட ஏழு வாள்கள், இரண்டு அதிநவீன மோட்டார் சைக்கிள்கள் என்பனவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் யாழ்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்பாண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply