
ஹம்பாந்தோட்டைக்கு 160 கிலோமீற்றர் தொலைவில் தென்கடல் பகுதியில் 4.1 மெக்னிட்டியுட் அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வால் ஆழிபேரலை ஏற்படுவதற்கான எச்சரிக்கை இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.