சஹ்ரானுடன் தொடர்பை பேணிய ஒருவர் கைது

உயித்த ஞாயிறு தற்கொலை குண்டுதாக்குதலில் உயிரிழந்த பிரதான சூத்திரதாரியான சஹ்ரானுடன் தொடர்பை பேணிவந்த குற்றச்சாட்டில் பொலன்னறுவை தம்பானை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினரால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தொடர்ந்து முன்னெடுத்துவரும் விசாரணையின் போது குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த உவைஸ் சைபூல் ரகுமான்  என்பவர் சஹ்ரானுடன் தொடர்பை பேணி வந்ததுள்ளர் என தெரியவந்ததையடுத்து குறித்த நபரை 8ம் திகதி அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்ட இவரை தடுத்துவைத்து விசாணைகள் மேற்கொண்டுவருவதாக அவர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir