அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறைகளைத் தடுக்கக்கோரி மாணவர்கள் பேரணி!

துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களைத் தடுக்க வலியுறுத்தி அமெரிக்காவின் நாஷ்வில் நகரில் பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்கள் டென்னசி மாகாண தலைமையகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றுள்ளனர்.

கடந்த மார்ச் 27 ஆம் திகதி நாஷ்வில்லில் உள்ள பாடசாலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 3 மாணவர்கள் உட்பட 6 பேர் பலியான நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட 28 வயதான பாடசாலையின் முன்னாள் மாணவரை பொலிசார் சுட்டுக்கொன்றனர்.

இந்த நிலையில் பாடசாலைகளில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கக்கோரி வகுப்புகளைப் புறக்கணித்து ஊர்வலமாக சென்ற மாணவர்கள், டென்னசி தலைமையகம் முன்பு அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply