மத்திய வங்கிப் பெட்டகத்திலிருந்து 5 மில்லியன் காணாமல் போனமை குறித்து விசாரணை

மத்திய வங்கியில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்து 5 மில்லியன் ரூபா காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மத்திய வங்கியின் அதிகாரிகள் கொழும்புக் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மத்திய வங்கியில் உயர் பாதுகாப்பு அமைப்புக்களுடன் கூடிய பெட்டகத்திற்குள் வைக்கப்பட்டிருந்த பண மூட்டைகள் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்புக் கோட்டைப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதோடு, மத்திய வங்கியும் உள்ளக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir