சாலையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது பேருந்து

நீர்கொழும்பில் இருந்து ஹன்வெல்ல நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று இன்று காலை கம்பஹா வத்துருகம பேருந்துச் சாலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேகம் காரணமாக  பேருந்து சாலையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின்போது, பேருந்தில் 70 பயணிகள் பயணம் செய்ததாகவும், விபத்தில் காயமடைந்தவர்கள் கம்பஹா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply