யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் கஞ்சி வழங்கல் நிகழ்வு முன்னெடுப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று முதல் 14ம் திகதிவரை, எமது இனம்,  சுமந்த வலிகளையும் வரலாற்றினையும்  எமது இளைய தலைமுறையினருக்குக் கடத்தும் செயற்பாட்டினை முன்னெடுக்கும் வகையில், தமிழர் தாயகம் எங்கும் பயணித்து, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வல்வெட்டித்துறை, ஆலடிச் சந்தியில் இன்று காலை ஆரம்பமாகியது.

இதில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினர்,  சிவில் சமூகத்தினர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், ஊடகவியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்தத் தொடர் நிகழ்வானது, எதிர்வரும் 14ம் திகதியன்று பொத்துவிலில் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

t03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply