இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை!

உத்தேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) தொடர்பான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையை ஜூன் மாதம் நடத்த இலங்கையும் தாய்லாந்தும் இணங்கியுள்ளன.

அதனடிப்படையில் இந்த ஆண்டு ஜூன் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 8 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மார்ச் 27-29 வரை கொழும்பில் நடைபெற்ற இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்து அமைச்சர்களுக்கு விளக்கியுள்ளார்.

மேலும், 2024-ம் ஆண்டின் முதல் காலாண்டு இறுதிக்குள் பேச்சுவார்த்தையை முடித்து ஒப்பந்த்த்தில் கையெழுத்திடுவதற்கு இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply