கோதுமை மாவின் விலை உயர்வு தொடர்பில் குழப்பம் – தெளிவுபடுத்திய அரசாங்கம்.

உள்நாட்டில் உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை தொடர்பில் அண்மைக்காலமாக நிலவும் குழப்பம் தொடர்பாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெளிவுபடுத்தியுள்ளார்.

இன்று காலை அமைச்சரவை மாநாட்டில் உரையாற்றியபோது அவர் இதனைக் கூறியுள்ளார்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கோதுமை மாவின் விலைகள் திருத்தப்படவில்லை என்றும், இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவுக்கே விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

இதன்படி, சம்பந்தப்பட்ட இரண்டு மா உற்பத்தியாளர்களின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு கிடைத்த உறுதிப்படுத்தலின்படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மாவின் விலை சிறிதேனும் அதிகரிக்கப்படவில்லை என்றும், உற்பத்தியாளர்களிடம் போதுமான அளவு இருப்பில் இருப்பதாகவும் உறுதியளித்ததாக அவர் தெரிவித்தார்.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply