மெக்சிகோவில் பயணிகள் வான், ட்றக், லொறி விபத்து – 26 பேர் உயிரிழப்பு

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பயணிகளைச் ஏற்றிச் சென்ற வானும், ட்றக் வண்டியொன்றும், பொருள்களை ஏற்றிச்சென்ற லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்துச் சம்பவித்துள்ளது.

குறித்த விபத்தில் 26 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜாலிஸ்கோ மாநிலத்தில் உள்ள குவாடலஜாராவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு நயாரிட்டில் உள்ள விடுதி ஒன்றுக்கு வான் சென்று கொண்டிருந்தது.

தமவுலிபாஸ் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது எதிரே வந்த லொறி மோதியதில், வான் தீப் பிடித்து எரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் அடிக்கடி விபத்துக்கள் சம்பவிக்கின்ற நிலையில், இந்த விபத்தில் சிக்கிய அனைவரும் மெக்சிகோ நாட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply