மூதூர் முஸ்லிம் பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது, 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்காக வேண்டி ஒரு நிமிட மௌன பிரார்த்தனையும் இடம்பெற்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில், மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
