ஓ.எல். பரீட்சை – நாளை நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புக்களுக்குத் தடை!

கல்விப் பொதுச் சாதாரண தர பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்களை நடாத்துதல் நாளை நள்ளிரவு 12 மணி முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் நடத்துவதற்குத் தடை விதிக்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கு மேலதிகமாக, மாதிரி வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல், துண்டுப் பிரசுரங்கள், கையேடுகள், இலத்திரனியல் அல்லது அச்சிடப்பட்ட ஊடகங்கள் மூலம் பரீட்சை வினாக்களை விளம்பரப்படுத்துதல் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ இந்த உத்தரவை மீறினால் அது குறித்து முறைப்பாடு செய்ய முடியும், என பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நீண்ட தாமதத்திற்கு உள்ளாகியுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் மே 29 முதல் ஜூன் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply