அமைச்சர் டிரான் அலஸின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் மூலம் தகவல் கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

பொதுப் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இவ்வாறான அச்சுறுத்தல்கள் வருமென்று அறிந்தே இந்த பொறுப்பைத் தான் ஏற்றுக்கொண்டதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் போதைப்பொருள் கடத்தல், பாதாள உலக செயற்பாடுகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று அவர் கூறினார்.

எவ்வாறான மிரட்டல்கள் வந்தாலும் தான் ஓர் அடிகூட பின்னோக்கிப் போகப்போவது இல்லை என்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply