இந்திய கடலிலிருந்து இலங்கை கடற்படையினரால் 14 சடலங்கள் மீட்பு!

இந்திய மத்திய கடலிலிருந்து இலங்கை கடற்படையினரால் 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் இந்திய பெருங்கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடிக் கப்பலான Lu Peng Yuan Yu 028 இன் மீட்பு நடவடிக்கைகளின் போதே குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளன.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் பேரில் கடற்படை சுழியோடி குழுவுடன் கடற்படையின் கடல் ரோந்துக் கப்பலான SLNS விஜயபாகு மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது

இந்தநிலையில், இலங்கை கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினர், முன்னதாக 2 சடலங்களை மீட்டனர். கப்பலின் பல்வேறு இடங்களில் இருந்து மேலும் 12 பணியாளர்களின் உடல்களை மீட்டுள்ளனர்.

இதேவேளை விபத்துக்குள்ளான சீன கப்பலில் 38 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply