பாடசாலை பஸ் சீசன் கட்டணத்தை அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானம்!

இலங்கை யினால் வழங்கப்படும் பருவச்சீட்டுக்(சீசன்) கட்டணத்தை அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

அம்பாறை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” பாடசாலை மாணவர்களுக்கான பருவச் சீட்டு கட்டணத்தை 25 – 30 வீதத்தினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான பருவச் சீட்டுக் கட்டணத்தையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிய கட்டண அதிகரிப்புக்கு அமையவே, பாடசாலை மாணவர்களுக்காக போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளின் சேவை தொடருமா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும்” எனக் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply