வடக்கு மாகாணத்தில் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு

வடக்கு மாகாணத்தில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்த விடயங்களை கேட்டறிந்துகொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், விரைவில் வடக்குப் பகுதிக்கு நேரில் வருவதாகவும், மக்களுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன், அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியபோதே குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமரர். சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தபோது வடக்குக்கு ஆற்றிய சேவைகளை இதன்போது நினைவுகூர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன், ஜீவன் தொண்டமானும் சிறப்பாக செயற்படுகிறார் என நேரில் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply