துப்பாக்கிச் சூட்டில் பாடசாலை ஆசிரியர் காயம்

பலப்பிட்டியவில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அம்பலாங்கொடை கல்வி வலயத்தில் கடமையாற்றும் குறித்த ஆசிரியர் அம்பலாங்கொடையில் உள்ள முன்னணி பாடசாலையொன்றின் பிரதி அதிபராகவும் சேவையாற்றியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது பலபிட்டிய நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இதேவேளை, நேற்று இரவு அம்பலாங்கொட அண்டடோல பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொருவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும், குறித்த துப்பாக்கிச்சூட்டினால் உயிர்ச்சேதம் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply