தொழிலாளர் சட்டத்தை திருத்துவது தொடர்பில், ஜனாதிபதி தொழிற்சங்க உறவுகள் பிரிவானது, அனைத்துத் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் விசேட கூட்டமொன்றை கூட்டவுள்ளதாகத் தொழிற்சங்கங்களின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ரத்னப்பிரிய, திருத்தங்கள் அடங்கிய சட்டமூலத்தை உருவாக்குவதற்குத் தொழிற்சங்கங்களின் பங்களிப்பு இன்றியமையாதது எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
T01