உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி! பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தற்போது வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், விஞ்ஞான பாடத்தின் விடைத்தாள் மதிப்பீடு ஜூன் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்குமாறு திறைசேரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்த பின்னர் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜயசுந்தர குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply