அமெரிக்காவின் பல்கலைக்கழகமொன்றில் துப்பாக்கிச் சூடு- இருவர் பலி

அமெரிக்காவின்,வர்ஜீனியாவின் ரிச்மண்டில் உள்ள ஹியூஜினோட் உயர்தரப் பாடசாலையில், இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின் போது, நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கடந்த செவ்வாயன்று திட்டமிடப்பட்டிருந்த மற்றுமொரு பட்டமளிப்பு விழா ஒத்திவைக்கப்பட்டதோடு, புதன்கிழமை நடைபெறவிருந்த வகுப்புக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

கொல்லப்பட்டவர்கள் 18 வயது இளைஞரும், அவரது 36 வயதுடைய தந்தையும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 19 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்ஜீனியா கொமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் விழா முடிந்ததும் மன்ரோ பூங்காவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

உள்ளூர் நேரப்படி 5:13 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply