சக மாணவர்கள் தாக்கியதால் கணித பரீட்சையை இழந்த மாணவன்..!

கண்டி, கட்டுகஸ்தோட்டையில் உள்ள ஆண்கள் பாடசாலை ஒன்றில் கல்விப் பொதுத் தரா தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர் ஒருவர் மீது மாணவர்கள் குழுவொன்று செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த மாணவன் கணிதபாட முதலாவது பகுதி வினாத்தாளை எழுதிய பின்னர் பாடசாலையிலுள்ள சிற்றுண்டிச்சாலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, அதே பாடசாலையைச் சேர்ந்த சக மாணவர்கள் சிலர் கிரிக்கெட் விக்கெட்டினால் தாக்கியதில் காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனால், அன்றைய தினம் நடைபெற்ற இரண்டாம்பகுதி கணிதப் பாடத்துக்கு தோற்ற முடியாமல் போயுள்ளது.

எனினும், குறித்த மாணவன் புதன்கிழமை இடம்பெற்ற பாடத்துக்கு தோற்றுவதற்காக வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவனைத் தாக்கிய சம்பவத்துடன் 7 மாணவர்கள் தொடர்புபட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பரீட்சையின் பின்னர் ஆரம்பிக்கவுள்ளதாகவும் கட்டுகஸ்தோட்டை காவல்துறையினர் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply