லங்கா பிரீமியர் லீக்கில் சுரேஷ் ரெய்னா!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, இந்த வார இறுதியில் நடைபெறும் லங்கா பிரீமியர் லீக் 2023 (LPL) வீரர்கள் ஏலத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அவரது அடிப்படை விலை 50,000 அமெரிக்க டொலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.

எதிர்வரும் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை நடைபெறும் இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் போட்டியில், ஐந்து அணிகளின் உரிமையாளர்கள் தங்கள் உரிமைகளை பிரதிநிதித்துவப்படுத்த வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply