
ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் சவுக்கடி கடலில் மீன்பிடியில் ஈடுபடும் 45 வயதுடைய தளவாயை சேர்ந்த தங்கராசா விஜயன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்கள் சடலம் ஒன்று கிடப்பதைக் கண்டு காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து காவல்துறையினர் குறித்த சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்தனர்.
விசாரணைகளின் பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.