இலங்கையில் கலைக்கப்பட்ட இரண்டு அரச திணைக்களங்கள்!

இலங்கையில் இரண்டு அரச திணைக்களங்களை கலைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திணைக்களங்களை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், உள்நாட்டு வர்த்தகத் திணைக்களம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை திணைக்களம் என்பவற்றையே கலைப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் உள்நாட்டு வர்த்தகத் திணைக்களம், நுகர்வோர் விவகார அதிகாரசபை ஸ்தாபிக்கப்பட்டதன் மூலம் இரத்துச் செய்யப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது கலைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தொலைத்தொடர்புத் துறை திணைக்களம், கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டு, 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply