உலகக் கிண்ண தகுதிகாண் போட்டி! முதலாவது போட்டியில் சிம்பாப்வேக்கு இலகு வெற்றி

உலகக் கிண்ணத்தின் முதலாவது தகுதிக்காண் கிரிக்கெட் போட்டியில் நேபாளம் மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் நேற்று மோதின.

இந்தப் போட்டியில் சிம்பாப்வே அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி தலைவர் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்திருந்தார்.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 290 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில், 291 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய சிம்பாப்வே அணி 44.1 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply