விசா அபராத தொகை அதிகரிப்பு! வெளியான வர்த்தமானி

நாட்டில் விசா காலம் முடிவடைந்த பின்னர் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு அறவிடப்படும் அபராத தொகையை மேலும் அதிகரிக்கப்படவுள்ளது எனும் வர்த்தமானி அறிவித்தலை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.

விசா காலம் முடிவடைந்து நாட்டில் சட்டவிரோதமாக 7 நாட்கள் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் ஒருவரிடமிருந்து விசா கட்டணத்திற்கு மேலதிகமாக 250 டொலர் அறவிடப்படும்.

மேலும் விசா காலம் முடிவடைந்து நாட்டில் சட்டவிரோதமாக 14 நாட்கள் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் ஒருவரிடமிருந்து விசா கட்டணத்திற்கு மேலதிகமாக 500 டொலர் அறவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply