கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சர்வதேச யோகா தின நிகழ்வு!

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சர்வதேச யோகா தின நிகழ்வும் வாராந்த ஒன்று கூடலும் இடம்பெற்றுள்ளது.

இன்று வியாழக்கிழமை காலை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதி லட்சுமி மண்டபத்தில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் ஆன்மீகச்சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமி கலந்து கொண்டு ஆன்மீக நோக்கில் கல்வி என்ற பொருளில் உரையாற்றியுள்ளார்.

அத்துடன் யாழ். இந்திய துணை தூதரகத்தால் நடத்தப்பட்ட யோகாசன பயிற்சியில் கலந்து கொண்டோருக்கான சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply