நெதர்லாந்தில் இந்திய உணவகமொன்றை நிறுவினார் சுரேஷ் ரெய்னா!

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் ‘ரெய்னா இந்திய உணவகம்’ என்ற பெயரில் இந்திய உணவகம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நிறுவியுள்ளார்.

இந்த உணவகத்தின் திறப்பு விழா நேற்று இடம்பெற்றுள்ளது.

ஆம்ஸ்டர்டாம் நகரில் புதிய உணவகம் ஒன்றை தொடங்கியுதை சுரேஷ் ரெய்னா சமூக வலைதளத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இவரது இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் உள்பட பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் உள்பட அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply