சிலியில் கனமழை – வீடுகளை இழந்த மக்கள்

சிலி நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் அதிகரித்துள்ளதாகவும், அதனால் மக்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.

சிலியின் கான்செப்சியன் மற்றும் நிக்குயின் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தில் சிக்குண்ட மக்களை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் இறங்கியுள்ளனர்.

தொடர்ந்து பெய்து வரும் மழையினால் அதிகரித்த வெள்ளத்தில் சிக்குண்டு, இருவர் உயிரிழந்துள்ளதாகவும், நால்வர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply