துப்பாக்கி வெடித்து சிறுவன் பலி

வாகரை, கட்டாமுரி பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் தயாரிக்கப்பட்ட ஆயுதம் தவறுதலாக வெடித்துச் சிதறியதில் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுவன் தனது மூத்த சகோதரர் மற்றும் இரண்டு மைத்துனர்களுடன் வேட்டையாடச் சென்றதாக தெரிவித்த பொலிஸார்,  அவர்கள் வைத்திருந்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதம் வெடித்ததாகத் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சிறுவனுடன் வேட்டையாடச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கியை மீட்ட பொலிஸார் சம்பவம் தொடர்பில், விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply