தந்தையுடன் ஏற்பட்ட தகறாறில் மகளுக்கு கத்திக் குத்து

தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் 19 வயது பெண்ணை நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.

பிலியந்தலையில் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 19 வயது சிறுமியை 40 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தையுடன் ஏற்பட்ட தகராறில், சந்தேக நபர் அவரின் மகளைக் கத்தியால் குத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில், மதுவுக்கு அடிமையான குறித்த சந்தேக நபரை  பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply