மலையகத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

மலையகத்தில் கடந்த சில தினங்களாக, தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால்,  பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை முதல் நோட்டன் பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், நோட்டன் தியகல பிரதான வீதியில் தியகல பகுதியில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் மண்சரிவு ஏற்பட்டு பொது போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வீதியில் வீழ்ந்துள்ள மண் மற்றும் கற்களை அகற்றும் பணியில் வீதி போக்குவரத்து அதிகார சபையின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மழையுடன் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கலுகல, பிட்டவல, நானுஓயா, கினிகத்தேனை, கடவல, வட்டவளை தியகல, ஹட்டன் உள்ளிட்ட பிரதேசங்களிலும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் குடாஓயா கொட்டகலை, தலவாக்கலை, சென்கிளையார், நானுஓயா, ரதல்ல ஆகிய பகுதிகளிலும் பயணம் செய்யும்போது,  மிகவும் அவதானமாக இருக்குமாறு போக்குவரத்து பொலிஸார்  கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களில் மழை பெய்து வருவதனால் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனால் குறித்த பகுதியில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்து மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply