கட்டார் விமான சேவையில் இனி இலங்கையர்களுக்கும் வாய்ப்பு!

கட்டார் விமான சேவையில் இனி இலங்கையர்களும் விமானப் பணிப்பெண்களாக இணைந்து கொள்ள சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரி, 21 வயதெல்லையை கொண்டிருக்க வேண்டியதுடன் , ஆங்கிலத்தில் எழுதுவதற்கும் உரையாடுவதற்கும் ஏற்ற புலமைத்துவமும் கொண்டிருக்க வேண்டுயதுடன் உடல் ஆரோக்கியமுடையவராகவும் இருத்தல் அவசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை விண்ணப்பதாரி கல்விப்பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்தவராகவும் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டார் விமான சேவையில் பணிப்பெண்களாக பணிப்புரிவதற்கான குறித்த தகுதியை கொண்டவர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை கட்டார் விமான சேவையின் பணிப்பெண்களாக விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply