குழாய் இடும் பணிக்காக மூடப்படும் ராஜகிரிய வீதி

அம்பத்தலே நீர் வழங்கல் திட்டத்திற்காக குழாய் இடும் பணி காரணமாக ராஜகிரிய வீதியின் 100 மீற்றர் தூரம், ஜூலை 04 ஆம் திகதி வரை மூடப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இராஜகிரிய சில்வா மாவத்தைக்கு நடுவில் இருந்து வெலிக்கடை வீதியில் மொரகஸ்முல்ல சந்தி வரையான 100 மீற்றர் வீதி மூடப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இந்த பகுதி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை  காலை 5 மணி வரை மூடப்படும்.

எனவே, இந்த வீதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை  கேட்டுக்கொண்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply