இலத்திரனியல் ஊடகங்களுக்கான சட்டமூலத்தை மறைக்கும் அமைச்சரவை!

இலத்திரனியல் ஊடகங்களுக்கான ஒலிபரப்பு அதிகாரசபையை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தை முன்வைப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை வழங்க அமைச்சரவை அலுவலகம் மறுத்துள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவினால் இந்த ஆவணம் கோரப்பட்டிருந்தது.

தீர்மானம் எடுக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரங்களை மட்டுமே வெளியிட முடியும் என்பதால் இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக அமைச்சரவை அலுவலகத்தின் தகவல் அதிகாரி டபிள்யூ.கே.வீரவர்தன தெரிவித்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

அதை எதிர்த்து, மேற்படி சட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்யப்பட்டு, அந்த வழக்கிலும், உரிய தகவல் மறுக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சரவைப் பத்திரம் வெளியிடப்படுவதால் உத்தேச ஊடக அனுமதிப்பத்திரங்களை வழங்குதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படத்துவதில் பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் எனவே, அதனை வெளியிட வேண்டாம் எனவும் ஊடக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 5 (1) (E) இன் கீழ் இந்தத் தகவல் கோரிக்கை மற்றும் மேல்முறையீடு நிராகரிக்கப்படுவதாக அமைச்சரவை அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்மொழியப்பட்ட மின்னணு ஒலிபரப்பு ஆணையத்தை நிறுவுவதற்கான வரைவு மசோதாவின் முடிக்கப்படாத பதிப்பு வெகுஜன ஊடக அமைச்சகத்தால் ஒளிபரப்பாளர்கள் மன்றத்திற்கு வழங்கப்பட்டது.

வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள் ஊடக சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கும் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன்படி, தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் வரைபை தயாரிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply