பச்சை மிளகாய் உள்ளிட்ட சில பொருட்களுக்கு தட்டுப்பாடு !

மட்டக்களப்பு பகுதியில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி என்பவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொதுச் சந்தை மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஒரு கிலோ பச்சமிளகாய் 1300 ரூபாவாகவும் , ஒரு கிலோ இஞ்சி 3000 ரூபாவாகவும் , ஒரு கிலோ கரட் 500 ரூபாவாகவும் விற்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தற்போது பச்சை மிளகாய் தட்டுப்பாடு காரணமாக ஒரு கிலோ பச்சை மிளகாயை 1200 ரூபாவுக்கு கொள்வனவு செய்து அதனை 1300 ரூபாவுக்கு விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை சந்தையில் ஒரு கிலோ இஞ்சியை கொள்வனவு செய்ய முடியாத அளவிற்கு இஞ்சி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply