லிவிவ் மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் – மூவர் உயிரிழப்பு

மேற்கு உக்ரைனின் லிவிவ் நகரத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ரஷ்ய ஏவுகணை ஒன்று தாக்கியதில் ஏறக்குறைய மூன்று பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

மேலும் 50 க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகளும், கார்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஏவுகணைத் தாக்குதல் மூலம் உக்ரைனின் உட்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் குறித்து ரஷ்ய இராணுவம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகளை மீட்புக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply