ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிவாயு கசிவு இல்லை

ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள எரிவாயு முனையத்தில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதாக வதந்திகள் பரப்பப்பட்டுவந்த நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

குறித்த விசாரனைகளை அடுத்து, துறைமுக வளாகத்தின் எரிவாயு முனையத்தில் எவ்வித வாயு கசிவு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

முனையத்தில் இருந்து வாயு கசிவதாக கிடைத்த தகவலை அடுத்து உடனடியாக விசாரணை நடத்திய அனர்த்த முகாமைத்துவ நிலையம், தற்போது வாயு கசிவு குறித்த வதந்திகள் பொய்யானவை என மக்களுக்கு தெரிவித்துள்ளது.

 

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply