தினசரி சேவைாக மாறும் யாழ்-சென்னை விமானசேவை!

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை இனி தினசரி விமான சேவையாக மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்குமான விமான சேவை நான்கு நாட்கள் மட்டுமே முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் குறித்த விமான சேவை தினசரி விமான சேவையாக நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த விமானசேவையானது சென்னையில் இருந்து காலை 9.35 க்கு புறப்படுவதுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து நண்பகல் 12.00 க்கு புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply