கொழும்பில் சினிமா பாணியில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை!

இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகலகம் வீதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபர் 25 வயதுடைய இளைஞர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதியில் சென்று கொண்டிருந்த வேளையில் , குறித்த இளைஞர் ஒரு குழுவினரால்  தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கு, அருகில் உள்ள கடை ஒன்றுக்குள் ஓடியுள்ள நிலையில் துரத்திச் சென்ற குழுவினர் அந்த இளைஞரை கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதை அடுத்து தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் கண்டுள்ள கிராண்ட்பாஸ் பொலிஸார், குறித்த நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

 

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply