அமெரிக்க சரக்குக் கப்பல் விபத்து – இருவர் உயிரிழப்பு

அமெரிக்காவில் ஜயாயிரம் கார்களை ஏற்றி சென்ற சரக்கு கப்பல் ஒன்று, நெவார்க் நகர துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தபோது, கப்பலின் 11 மற்றும் 12-வது தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த சில கார்கள் தீப்பற்றி எரிந்ததில் விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்தானது, அமெரிக்க நேரப்படி, நேற்று இரவு 9.30 மணியளவில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, தீயை அணைப்பதற்காக உள்ளே சிக்கிக்கொண்ட தீயணைப்பு வீரர்கள் இருவர், வெளியே வர முடியாத நிலையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தீ வேகமாகப் பரவியதாலும், அதனைக் கட்டுப்படுத்தமுடியாத நிலை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply