அதிக அளவில் உற்பத்தி செய்யப்படவுள்ளது திரிபோஷ

நிறுவனத்தில் இயந்திரங்கள் மற்றும் பணியாளர்கள் முழுத் திறனுடன் பணிபுரிவதாகவும்,  திரிபோஷ அதிக கொள்ளளவில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் இலங்கை திரிபோஷ நிறுவனத் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர், திரிபோஷ உற்பத்திக்கான பிரதான மூலப்பொருளான சோளத்தைக் பெறுவதில் நிதி நெருக்கடி நிலவியமை காரணமாக, சிக்கல் ஏற்பட்டது. ஆனால் சுகாதார அமைச்சின் தலையீடு மற்றும் நிதியுதவியுடன் திரிபோஷாவின் உற்பத்தி தற்போது முன்னேறியுள்ளது.

உலக உணவுத் திட்டமும் மற்றும் பல தனியார் நிறுவனங்களும் திரிபோஷவை உற்பத்தி செய்யும் போது முக்கிய பொருட்களை வழங்க உதவியது. இதேவேளை, இந்த வருடத்தின் அடுத்த சில மாதங்களுக்கு மக்காச்சோளத்தை வழங்குவதாக உலக உணவுத் திட்டம் உறுதியளித்துள்ளது. தற்போது, திரிபோஷ நிறுவனம் அதன் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக இந்த முக்கிய பொருட்களைப் பெறுகிறது.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு திரிபோஷ வழங்கப்படும். எவ்வாறாயினும், ஆறு மாதங்கள் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு திரிபோஷ வழங்குவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக, பல சுற்று விவாதங்கள் நடத்தப்பட்டன, ஆனால் அவை முடிவடையவில்லை. எனவே, சுகாதார அமைச்சின் ஊடாக அமைச்சரவை பத்திரத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை.

தீர்வுகள் வழங்கப்பட்டால், ஆறு மாதங்கள் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு திரிபோஷ வழங்கும் திறன் த்ரிபோஷ நிறுவனத்திற்கு உள்ளது என தலைவர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply