சீனாவில் சிறுவர்கள் பாடசாலையில் கத்திக்குத்து – 6 பேர் பலி

சீனாவின் தென்கிழக்கு குவாங்டாங் மாகாணத்தில் சிறுவர்கள் பாடசாலை ஒன்றில் நடந்த  கத்திக் குத்துச் சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும்  ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் சீன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, குறித்த கத்திக் குத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய வு என்ற குடும்பப்பெயர் கொண்ட 25 வயதுடைய நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒரு ஆசிரியர், இரண்டு பெற்றோர்கள் மற்றும் மூன்று மாணவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று, உள்ளூர் நேரப்படி 7:40 மணிக்கு குறித்த தாக்குதல் நடந்ததாகவும், சந்தேக நபர் 8 மணிக்கு கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply