நேபாளத்தில் பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்

நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் நேற்று காணாமல் போனதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த ஹெலிகாப்டர் சொலுகும்புவில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்று கொண்டிருந்தது எனவும் காலை 10 மணியளவில் கட்டுப்பாட்டு கோபுரத்துடன் துண்டிக்கப்பட்டது எனவும் நேபாள தகவல் அதிகாரி ஞானேந்திர புல் தெரவித்தார்.

9NMV என்ற அழைப்பு அடையாளத்துடன் கூடிய ஹெலிகாப்டர் உள்ளூர் நேரப்படி, காலை 10:12 மணிக்கு ரேடாரில் இருந்து இறங்கியது எனவும்  காணாமல் போன ஹெலிகாப்டரில் ஐந்து வெளிநாட்டவர்களும் விமானியும் இருந்ததாக  தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நேபாளத்தின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply