சிக்காகோவைத் தாக்கிய சூறாவளி – விமான சேவைகள் ரத்து

அமெரிக்காவின் சிக்காகோ நகரம் அமைந்துள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தை அடுத்தடுத்து 8 சூறாவளிகள் தாக்கியுள்ளன.

இதனையடுத்து, சிக்காகோ நகரம் முழுவதும் எச்சரிக்கை ஒலி பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற வேணடாம் என அறிவுறுத்தப்பட்டனர்.

இந்நிலையில், சூறாவளி தாக்கத்தின் போது,  இடியுடன் பெய்த மழையின் காரணமாக, சிக்காகோவின் ஓஹேர் மற்றும் மிட்வே விமான நிலையங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாகவும், 300 க்கும் மேற்பட்ட விமான சேவைகளின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply