யாழ் நூலகத்தில் கனேடிய உயர்ஸ்தானிகர்!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் இன்று யாழ்ப்பாண பொது நூலகத்தைப் பார்வையிட்டுள்ளார்.

இதன்போது நூலகத்தில் யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன், கனேடிய உயர்ஸ்தானிகரை வரவேற்று கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பில், யாழ்ப்பாண பொது நூலக நூலகர் உள்ளிட்ட சில உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, எரிக் வோல்ஸ் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை யாழில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றைய தினம் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி , அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள் – கனேடிய உயர்ஸ்தானிகருக்கு அறிக்கை கையளித்த சிறீதரன்!

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply