காணாமல் போன தாய் மற்றும் கைக்குழந்தை சடலமாக மீட்பு

அங்குருவத்தோட்ட, ரத்மல்கொட பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியிலிருந்து 24 வயதுடைய பெண் மற்றும் அவரது 11 மாத கைக்குழந்தை ஆகியோரின் சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் வசனா குமாரி மற்றும் அவரது கைக்குழந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்கள் ஜூலை 18 முதல் அங்குருவத்தோட்ட, உருதுதாவ பிரதேசத்தில் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அங்குருவத்தோட்ட பொலிஸில் உயிரிழந்த பெண்ணின் கணவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சடலங்கள் பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் குடியிருப்பில் இருந்து கிட்டத்தட்ட 500 மீற்றர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும் உயிரிழந்த பெண்ணின் உறவினர் என அடையாளம் காணப்பட்ட ஒரு நபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply