வங்காளதேசத்தில் பயணிகள் பேருந்து விபத்து – 17 பேர் உயிரிழப்பு

வங்காளதேசத்தில் பயணிகள் பேருந்து குளத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வங்காளதேசத்தின் பரிஷால்- குல்னா நெடுஞ்சாலையில் சத்ரகாண்டா பகுதியிலுள்ள வீதி ஓரத்தில் உள்ள குளத்துக்குள் விழுந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்ததாலே குறித்த விபத்து இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பேருந்தில் 60 பேர் பயணித்ததாகவும், விபத்தில் சிக்கி கடலில் முழ்கிய ஏனையோரை மீட்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply