சீனாவில் டோக்சுரி புயலின் தாக்கம் – 178 வீடுகளுக்கு பாதிப்பு

சீனாவின் பல மாகாணங்களில் டோக்சுரி புயல் தாக்கியதன் காரணமாக 178 வீடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

சீனாவின் புஜியான் மாகாண கடற்கரை அருகே புயல் கரையை கடந்தபோது  பெய்த கனமழை காரணமாக, அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புயலின் காரணமாக 178 வீடுகள் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளதோடு, பயிர்களும் நீரில் மூழ்கி அழுகியுள்ளன.

இதன்மூலம், அங்கு 493 மில்லியன் அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக சீன அரசாங்க செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே வெள்ளத்தால் 8 இலட்சத்து 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply