சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை திரும்பப் பெறக்கூடாது என்பதில் சுகாதாரத்துறை செயலாளர் உறுதி – ஜனக ஸ்ரீ சந்திரகுப்த

ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிட வேண்டாம் என அரச ஊழியர்களுக்கு அறிவுறுத்தி வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை எக்காரணம் கொண்டும் மீளப்பெறப்பட மாட்டாது என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சுற்றறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த வாரம் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சுகாதார தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ள சூழ்நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஸ்தாபன சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதால் சுற்றறிக்கையை மீளப்பெற வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.

எனவே, சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டிய அவசியமில்லை என மீண்டும் வலியுறுத்தினார்.

சுகாதாரத் துறையில் ஏற்படும் சம்பவங்கள் தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருவதால், ஊடகங்கள் அல்லது பொதுமக்களுக்கு உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிடும் போது அரசு ஊழியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான ஒரு சுற்றறிக்கையை வெளியிடும் முடிவை சுகாதார நிபுணர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கடுமையாக சாடியுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply